ஜப்பானில் அவசரநிலை பிரகடனம் பிறப்பிப்பு!


ஜப்பானில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள முக்கிய நகரங்களில் அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த வைரஸ் கட்டுப்படுத்த முடியாமல், உலக நாடுகளே திணறி வருகின்றன. அதிலும் உலகின் முன்னணி நாடான அமெரிக்காவே, இந்த வைரஸால் நிலைகுலைந்து போயுள்ளது. இதனால், அந்த நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவை தொடர்ந்து, ஜப்பானிலும் அவசர நிலை பிரகடனப் படுத்தப்படுத்த அந்நாட்டின் பிரதமர் ஷின்ஷோ அபே முடிவு செய்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும், டோக்கியோ, ஒசாகா உள்பட 5 பிராந்தியங்களில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே அறிவித்துள்ளார்.
Blogger இயக்குவது.