தேர்தல் குறித்து பிரதமர் மஹிந்த வெளியிட்ட தகவல்!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்காமல் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அவர்களுக்கு எந்த அதிகாரம் இல்லை என்றும் 1981 ஆம் ஆண்டின் இலக்கம் 1 நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரிவு 24 (3) ஐ மேற்கோள் காட்டி பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் எதிர்காலத்தில் என்ன நிகழலாம் அல்லது நடக்காது என்ற ஊகத்தின் அடிப்படையில் இத்தகைய சட்டங்களை புறக்கணிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதன் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழு முதலில் பிரிவு 24 (3) இன் கீழ் தனது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அதன்பின்னர் நிலுவையில் உள்ள ஏதேனும் சிக்கல்கள் தொடர்பில் விவாதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.