பொலிசாரின் தடையை மீறி யாழ் செம்மணியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலி!!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இன்று முற்பகல் 11 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு நினைவுச் சுடரேற்றுவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் சென்றிருந்தனர்.

எனினும் யாழ்ப்பாணம் பொலிஸார் அதற்கு முதலில் அனுமதி வழங்க மறுத்தனர்.
அதன் பின்னர் , அங்கு வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பொலிஸாருடன் பேச்சு நடத்தினர்.
எனினும் சுமார் 30 நிமிடங்களாக பொலிஸாரால் அனுமதியளிக்கப்படாத நிலையில் அதன் பின்னர் நினைவுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன் இதன்போது அங்கு இராணுவத்தினரும் வருகை தந்ததுடன், சமூக இடைவெளியைப் பின்பற்றி நினைவுச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.