திருப்பி அனுப்பப்பட்டன யாழ் வந்த பேருந்துகள்!!
அக்கரைப்பற்று மற்றும் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சேவையில் ஈடுபட்ட பேருந்துகள் இன்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
அக்கரைப்பற்றிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சேவையில் ஈடுபட்ட பேருந்து வவுனியாவிலும் திருகோணமலையிலிருந்து வருகை தந்த பேருந்து ஆனையிறவிலும் திருப்பி அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் திருகோணமலை சாலைக்குச் சொந்தமான பேருந்து இன்று முற்பகல் யாழ்ப்பாணத்துக்கான சேவையை ஆரம்பித்தது.
அந்தப் பேருந்து கிளிநொச்சி கடந்து ஆனையிறவு சோதனைச் சாவடியில் வைத்து யாழ்ப்பாணத்துக்கு அனுமதிக்கப்படாது திருப்பியனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன், அக்கரைப்பற்று சாலைக்கு சொந்தமான பேருந்தும் வவுனியாவில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் கண்டி மாவட்டங்களுக்கான சேவையை இ.போ.ச வின் யாழ்ப்பாணம் – கோண்டாவில் சாலை பேருந்துகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதன்படி மட்டக்களப்புக்கு காலை 6.30 மற்றும் 7.30, கண்டிக்கு காலை 7.15 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து சேவையை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்ப்டுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




