ஆணைக்குழுவில் யாழ்.மாவட்ட செயலக அதிகாரி ஒருவர் மீது முறைப்பாடு!!

நாட்டில் கொரோனா அச்சத்தால் ஊரடங்கு சட்டம் மற்றும் கட்டுப்பாடுகள் இறுக்கமாக்கப்பட்டிருந்தபோது யாழ்.மாவட்டத்திற்கு கட்டிட பொருட்கள் கொண்டுவருவதற்கான அனுமதியை வழங்க மூத்த உத்தியோகஸ்த்தர் ஒருவர் லஞ்சம் பெற்றதாக தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊரடங்குவேளையில் பிற மாவட்டங்களிற்கு சென்று வருவதற்கான அனுமதி மாவட்டச் செயலகங்களிலேயே வழங்கப்பட்டுவந்தது.
இந்த நிலையில் குறித்த அனுமதியை பெற்று வெளியாருக்கு மோசடியாக வழங்கப்பட்டதாகவே அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இவ்வாறு தெரிவிக்கப்பட்ட முறைப்பாடு நேரில் சமர்ப்பிக்கப்படாததோடு அனுப்பியவரின் தொலைபேசி இலக்கமும் குறிப்பிடப்படவில்லை என்வும் தெரியவருகின்றது.
இதேநேரம் கொழும்பு வெள்ளவத்தையின் 59ம் ஒழுங்கையினை முகவரியாக குறிப்பிடப்பட்டுள்ளதனால் குறித்த முறைப்பாடு தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மாவட்டச் செயலகம் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கையில் கரிசணை கொண்ட ஓர் உத்தியோகத்தர் தொடர்பிலேயே இவ்வாறு முறையிடப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.