கரிய நாள்- முள்ளிவாய்க்கால் நினைவு நாள் கவிதை!!
தீப்பற்றி எரிகிறதே
தீந்தமிழ் மனங்கள் எல்லாம்,
நந்திக்கடலோடு நாம்
நாதியற்றுப் போனதால்.....
மேதினி உச்சரித்தது
முள்ளிவாய்க்காலை,
ஏதிலி தானானது
மறத் தமிழினம் ....
குற்றுயிர் கண்டு
நொந்தோம்,
குலை உயிர் வெந்து
நின்றோம்......
ஆயுதம் அஸ்தமித்தது,
அதிகாரம் வெறி கொண்டது,
கூட்டுச்சதி அன்று
குரோதம் கக்கி நின்றது....
கரிகாலச் சீமையிலே
கண்ணீரின் ஆறாச்சு,
கடலாடும் அலையெல்லாம்
செந்நீரில் நனைஞ்சாச்சு...
கால ஏட்டின்
கரிய நாளாய்
கருவானதே,
முள்ளிவாய்க்கால்
நினைவு நாள்.......
கோபிகை
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
தீந்தமிழ் மனங்கள் எல்லாம்,
நந்திக்கடலோடு நாம்
நாதியற்றுப் போனதால்.....
மேதினி உச்சரித்தது
முள்ளிவாய்க்காலை,
ஏதிலி தானானது
மறத் தமிழினம் ....
குற்றுயிர் கண்டு
நொந்தோம்,
குலை உயிர் வெந்து
நின்றோம்......
ஆயுதம் அஸ்தமித்தது,
அதிகாரம் வெறி கொண்டது,
கூட்டுச்சதி அன்று
குரோதம் கக்கி நின்றது....
கரிகாலச் சீமையிலே
கண்ணீரின் ஆறாச்சு,
கடலாடும் அலையெல்லாம்
செந்நீரில் நனைஞ்சாச்சு...
கால ஏட்டின்
கரிய நாளாய்
கருவானதே,
முள்ளிவாய்க்கால்
நினைவு நாள்.......
கோபிகை
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo