சிறைக் கூடத்திலிருந்து தொலைபேசிகள் மீட்பு!!!
கொழும்பு விளக்கமறியல் சிறையில் 4 கையடக்கத் தொலைபேசிகளும் 5 சிம் அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன.
பிரபல பாதாள உலக தலைவனும் பல்வேறு திட்டமிட்ட குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபருமான ‘ கொஸ்கொட தாரக’ தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்திலிருந்தே அவர் மீட்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை உளவுத்துறை அதிகாரிகள் முன்னெடுத்த விசேட சோதனைகளின் போதே இவை மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை குறித்த சிரைக் கூடத்தில் கொஸ்கொட தாரகவுடன் 10 சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo