பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் கடற்படையினர்!!

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்களை தனிமைப்படுத்துவதற்காக வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர்.

இன்று (22) இரவு 7 மணியளவில் 17 பேரூந்துகளில் கடற்படையினர் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 500 இற்கு மேற்பட்ட கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, அம் முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் பலர் கொரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கமைவாக 17 பேரூந்துகளில் அழைத்து வரப்பட்ட கடற்படையினர் வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதேவேளை, கடற்படையினரை அழைத்து வந்த பேரூந்துகளை வவுனியா, குருமன்காடு பகுதியில் வைத்து இரு ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுத்த போது அங்கு வந்த கடற்படை அதிகாரிகள் ஊடகவியலாளரை புகைப்படங்களை அழிக்குமாறு கூறி தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது 17 பேரூந்துகளும் வீதியில் நிறுத்தப்பட்டமையால் சிறிது நேரம் அவ் வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு மேலும் இரு ஊடகவியலாளர்கள் சென்று கடற்படையினருடன் கலந்துரையாடியதையடுத்தும், சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகை தந்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்பாடுத்த முனைந்ததையடுத்தும் கடற்படையினர் அங்கிருந்து சென்றிருந்தனர்
Blogger இயக்குவது.