குமுதினி படுகொலை நினைவு கவிதை!!

கொட்டிய குருதியும்
கத்திய கதறலும்
அடங்கிப் போனது,
அலையோடும் கடலோடு....


நீலம் பாரித்த நீரிலே
செங்குருதி படிந்ததோ...
அங்கத்தின் துண்டுகள்
அதன் மீது மிதந்ததோ

குமுதினி படுகொலையின்
கொடிதினைக் கடந்து
முப்பத்தைந்து ஆண்டுகள்
வலியோடு நகர்ந்ததே....


தமிழனாய்  பிறந்ததால்
தரணியில் நாங்கள்
தாங்கிடும்   துயரமோ
தனியொரு கணக்காச்சே......


தமிழன்னை விடிவிற்கு
தமிழரின் உரிமைக்கு
துலாபாரம் தந்தது
தமிழ் மக்கள் உயிர்தானே.

என்று தீரும்
இந்த அவலம்?
 இது தானே
எங்கள்  கவலை???


கோபிகை



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo




Blogger இயக்குவது.