இங்கிலாந்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க வேண்டும்-அன்னே லாங்ஃபீல்ட்

ஆரம்ப பாடசாலைகளை மீள ஆரம்பிக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கிலாந்து குழந்தைகள் ஆணையர் அன்னே லாங்ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.



கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில், மாணவர்கள் பாடசாலைக்கு செல்வது பாதுகாப்பானதா என்று ஆசிரியர் சங்கங்களும் கல்வித் துறையும் வாதிட்டு வருகின்றன.

இந்தநிலையில், இருதரப்பினரும் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு, ஒரு திட்டத்தை வகுக்க வேண்டுமென அன்னே லாங்ஃபீல்ட் வலியுறுத்தியுள்ளார்.

எனினும், ஆரம்ப பாடசாலைகளை விரைவில் மீள ஆரம்பிக்க வேண்டும் என அன்னே லாங்ஃபீல்ட் தனது தனிப்பட்ட விருப்பதை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லாங்ஃபீல்ட் கூறுகையில், ‘ஆரம்ப பாடசாலைகளை விரைவில் மீள ஆரம்பிக்க வேண்டும் என்ற விடயத்தில் இருதரப்பினரும் சண்டையிடுவதை எண்ணி நான் ஏமாற்றமடைகிறேன்.

குழந்தைகளின் நலன்களுக்காக ஒன்றிணைந்து செயற்பட அனைத்து தரப்பினரும் அதிக விருப்பத்தை காட்ட வேண்டும்’ என கூறினார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
Blogger இயக்குவது.