சூர்யாவின் முடிவை பாராட்டும் பார்திபன்!
ஜோதிகாவின் “பொன்மகள் வந்தாள்” திரைப்படம் எதிர்வரும் 29 ஆம் திகதி இணையத்தில் வெளியாகவுள்ளது.
இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்புகளை மீறி சூர்யா இந்த திரைப்படத்தை இணையத்தில் வெளியிடவுள்ளார்.
இதனை பாராட்டியுள்ள பார்திபன், “தைரியம்தான் புருஷ லட்சணம் என்பார்கள். ஒரு தைரிய லட்சுமியின் புருஷன், எத்தனை வைராக்கியத்தோடு அத்துணையின் காதல் கணவராக, காதலராக வைத்த காலை பின்வாங்காத வையக வீரராக ஒழுக்கம், தெளிவு, தைரியமுடன் பொன்மகள் வந்தாள் படத்தை இணையதளத்தில் வெளியிடுகிறார். சூர்யாவுக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.