வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி- மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி  தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை அண்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
குறித்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி எதிர்வரும் 15ஆம் திகதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொள்ளும் எனவும் அதனைத் தொடர்ந்து 16ஆம் திகதி புயலாக வலுப்பெறக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில்,  தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் எதிர்வரும் 15ஆம் திகதி  சூறாவளி காற்றானது மணிக்கு 45 – 55 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 65 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மீனவர்கள் இப்பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்,  தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை,  தேனி, இராமநாதபுரம்,  சிவகங்கை,  நெல்லை,  தூத்துக்குடி,  கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய  மிதமான மழை பெய்யும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.