கேகாலையில் பல இடங்கள் வெள்ளக் காடானது!!

நாட்டில் பெய்துவரும் அடைமழை காரணமாக கேகாலை மாவட்டத்தில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக கேகாலை மாவட்டத்தில் வட்டார ஹெல பகுதியில் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு 48 வயதான ஒருவரும், வல்தெனிய பிரதேசத்தில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 75 வயதான பெண் ஒருவர் மண்ணில் புதையுண்டும் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் வரக்காபொல உடுகும்புர பிரதேசத்தில் லொறி ஒன்று மண்சரிவு காரணமாக பாதையை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
மற்றும் அவிசாவளை – கண்டி பிரதான வீதி, கொட்டியாக்கும்புற, கன்னந்தோட்ட பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் களனி ஆற்றின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் களனி ஆற்றின் அருகில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் புளத்கோபிட்டிய, தெரணியகலை, தெஹியோவிற்ற பகுதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.