வார இறுதி வரை அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகள்!!

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில், ஆரம்பிக்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகளை தொடர்ந்தும் இந்த வாரம் வரை முன்னெடுக்கவுள்ளதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் மக்களின் நடத்தைகளை கருத்திற்கொண்டு நிறுவன மட்டத்திலான எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நேற்று முதல் 23 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டபோதிலும் ஊரடங்கு உத்தரவை படிப்படியாக தளர்த்தி மக்களின் அன்றாட செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கும் பணிகள் நேற்று ஆரம்பமாயின.
அதற்கமைய பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு அலுவலகங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.