கிளிநொச்சியில் வழங்கப்பட்ட ஆசிரியர் அடையாள அட்டையில் தமிழ் மொழி புறக்கணிப்பு

கிளிநொச்சி கல்வி வலய ஆசிரியர்களுக்கு கல்விவலயத்தினால்  வழங்கப்பட்ட ஆசிரியர் அடையாள அட்டையில்  தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. சிங்களம், ஆங்கில மொழிகளிலேயே உள்ளது.

இதுகுறித்து கல்விவலய அதிகாரிகளிடம் ஆசிரியர்கள்   கேட்ட போது இதனை பொலிஸார், இராணுவத்தினருக்கு காட்டத்தானே இதனை தந்திருக்கு. அவர்களுக்கு தமிழ் விளங்காதுதானே அதுதான் தமிழ் இல்லை அவர்களுக்கு விளங்கும் வகையில் சிங்களம், ஆங்கிலத்தில் அடையாள அட்டையில் விபரங்கள் உள்ளன என அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.


Blogger இயக்குவது.