வழமைக்கு திரும்பும் போக்குவரத்து சேவை!

கொரோனா வைரஸ் காரணமாக பொது போக்குவரத்து சேவைகளை வரம்பிற்குள் மேற்கொள்வதற்கு சுகாதார பிரிவினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார பிரிவின் ஆலோசனைக்கமைய இன்று முதல் அதிக அவதானம் மற்றும் அவதானமிக்க பிரதேசங்களை தவிர்த்து ஏனைய மாகாணங்களுக்கு இடையில் பேருந்து பயணிக்க அனுமதி தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் பொது போக்குவரத்து சேவைகள் பணிகளுக்காக செல்லும் அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நிலவும் நிலைமைக்கமைய எதிர்வரும் நாட்களுக்குள் கொரோனா தொடர்பான சிறப்பான நிலைமை நாட்டினுள் காணப்பட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமையை போன்று போக்குவரத்து சேவையினை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ரயில் போக்குவரத்து தொடர்பில் தற்போது காணப்படுகின்ற நிலைமைக்கமைய ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளும் அரச மற்றும் தனியார் பிரிவு அதிகாரிகள் வருகை தராமையினால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.