சூறாவளியால் நீர் மின் உற்பத்தி உயர்வு!!

அம்பன் சூறாவளியினால் நாடு முழுவதும் பெய்த கன மழை காரணமாக நீர் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்த விடயம் நீர் மின்சக்தி உற்பத்தி தொடர்பில் இலங்கை மின்சார சபை மின்சக்தி, சக்திவலு அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு நேற்று மாலை சமர்ப்பித்த அறிக்கையிலேயே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிய வறட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக குறைவடைந்து, நீர் மின் உற்பத்தி 15-20 சதவீதம் வரை குறைந்தது.
இந் நிலையில் அம்பன் சூறாவளியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் பெய்யும் பலத்த மழையினால் அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளது.
இதனால் நேற்றைய தினம் நீர் மின் உற்பத்தி 31 சதவீதமாக அதிகரித்துள்ளதுடன், நேற்று மாலைக்குள் 668 மெகாவொட் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சரிடம் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.