ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறிய 178 பேர் கைது!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 178 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிவரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு காலப்பகுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த காலப்பகுதிக்குள் 38 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று அதிகாலை 4 மணிவரையான காலப்பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 66 ஆயிரத்து 519 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.