அதிகரித்தது கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை!!

இலங்கையில் மேலும் 05 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொற்றாளார் எண்ணிக்கை 1060 ஆக அதிகரித்துள்ளது.


மேற்படி தொற்றாளர்களில் நான்கு பேர் தனிமைப்படுத்தலிலிருந்த கடற்படையினராவர்.

இந்நிலையில், இதுவரை மொத்த எண்ணிக்கை 1060 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 620 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 428 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருவதுடன் 110 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.