பாக்யராஜூடன் கைகோர்க்கும் பிரபல ஹீரோ!

பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த 1983ம் ஆண்டு வெளிவந்த ’முந்தானை முடிச்சு’ திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டானது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் முருங்கைக்காய் வசனம் 37 ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை புகழ் பெற்று நிற்பது பாக்கியராஜின் வெற்றிக்கு உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் 37 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் ரீமேக்கை கே.பாக்யராஜ் உருவாக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ’முந்தானை முடிச்சு’ ரீமேக் படத்தில் பாக்கியராஜ் உடன் பிரபல ஹீரோ சசிகுமார் இணைய உள்ளதாகவும், இந்த படத்தை ஜேஎஸ்பி சதீஷ்குமார் தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த படம் குறித்த விரிவான தகவல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. 37 ஆண்டுகள் கழித்து பாக்யராஜின் சூப்பர்ஹிட் படம் ஒன்று ரீமேக் ஆகவிருப்பது அவரது ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.