அவுஸ்திரேலியாவில் அவசர நிலை மேலும் நீடிப்பு!

அவுஸ்திரேலியாவில் அவசரகால நிலை மேலும் நான்கு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலுக்கு உள்ளாகியுள்ளமையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவிஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் ஜூலை 19ஆம் திகதிவரை அவசரகால நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 01ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், பொது மக்கள் பெரியளவின் ஒன்றுகூடலில் ஈடுபட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

இந்த நிலையிலேயே மீண்டும் நான்கு வாரங்களுக்கு அவசரகால நிலை நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக 7 ஆயிரத்து 461 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 102 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.