ரவிக்கு எதிரான பிடியாணை - மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானம்!!

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் ஏனையவர்களை கைது செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் வழங்கிய பிடியாணை உத்தரவிற்கு இடைக்கால தடை உத்தரவை வழங்குவதா இல்லையா என்பதை ஜூலை மாதம் 7 ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


மத்திய வங்கி பினைமுறிகள் மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 10 சந்தேக நபர்களுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தது.

சட்டமா அதிபர் அளித்த பிரதிநிதித்துவங்களை கவனத்தில் எடுத்துக் கொண்ட நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்திருந்தது.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவத்தின் முன்னாள் தலைவர் அர்ஜூன் அலோசியஸ், குறித்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கசுன் பாலிசேன உட்பட 10 பேரை கைது செய்ய பிடியாணை பெற்றுக்கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டிருந்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி மற்றும் மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின் போது நிக்ழ்ந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் இந்த பிடியாணை கோரப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மார்ச் 6 ஆம் திகதி அவர்களை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்த நிலையில் தம்மை கைதுசெய்ய கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை, செல்லுபடியற்றதாக அறிவிக்குமாறு கோரி முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட நால்வர் மேன் முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.