அல்ஜீரியாவில் முடக்கநிலை தளர்வு!!

கொரோனா வைரஸ் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த அல்ஜீரியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் முடக்கநிலையில் சற்று தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பொது போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படவுள்ளதுடன் மேலும் சில வணிகங்களை மீண்டும் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் நேற்று சனிக்கிழமை அறிவித்துள்ளது.
அரசாங்கம் 19 மாகாணங்களில் ஊரடங்கு உத்தரவை முடிவுக்கு கொண்டுவந்துள்ள நிலையில் தலைநகர் அல்ஜியர்ஸ் உட்பட மிகுதி 29 மாகாணங்களில் இரவு 8 மணிமுதல் காலை 5 மணியவரையிலான ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நகர்ப்புறங்களில் உள்ள பேருந்துகள் மற்றும் வாடகை கார்கள் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளுடன் மீண்டும் சேவையை தொடங்க முடியும் என்றும் சில வணிக நிறுவங்களும் திறக்க அரசாங்கம் அனுமதி வழங்கியது.
இதேவேளை மார்ச் மாதத்தில் 50% அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியத்துடனான விடுப்பை முடிவுக்கு கொண்டுவர அதிகாரிகள் முடிவு செய்துள்ள அதேவேளை கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் இருப்பவர்களுக்கு தொடர்ந்தும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அல்ஜீரியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 10 ஆயிரத்து 810 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதில் 760 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.