குடமுருட்டி பாலத்தை திருடிய கடை முதலாளி உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்!

கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் 14 வது கிலோ மீற்றரில் அமைந்துள்ள குடமுருட்டி பாலத்தின் இரும்புகள் கடந்த மாதம் சில விசமிகளால் திருடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட மூவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த கிளிநொச்சி பொலீஸார், கிளிநொச்சி கனகபுரம் வீதியில் கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைமை காரியாலயத்திற்கு முன்பாக உள்ள இரும்புத் தொழிலகம் ஒன்றில் பாலத்தின் பாகங்கள் அறுக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து பாலத்தின் மற்றொரு தொகுதி பாகங்கள் கிளிநொச்சி ஏ9 வீதியில் 155 ஆம் கட்டைப் பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் . இரும்புக் கடை ஒன்றின் முதலாளி உட்பட மூவர் கைது செய்யப்பட்டு பொதுச் சொத்துக்களை திருடியவர் என்ற குற்றத்தின் பெயரில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதேவேளை திருடப்பட்ட இரும்பு பாகங்களின் பெறுமதி 10 தொடக்கம் 15 மில்லியன் வரை ஆகும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவித்திருந்தமை குறிப்பிட்டத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.