முத்த பாபா கொரோனாவால் மரணம் - முத்தம் பெற்றவர்கள் அதிர்ச்சி

கொரோனாவை விரட்டுவதாகக் கூறி பக்தர்கள் கையில் முத்தம் கொடுத்து வந்த சாமியார் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில் அவரிடம் முத்தம் பெற்றவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் ராட்லா மாவட்டத்தில் அஸ்லம் பாபா என்ற சாமியார் பல ஆண்டுகளாக ஆசிரமம் அமைத்து அருள்வாக்கு கூறி பக்தர்களை நம்பவைத்து வந்துள்ளார். இதற்கிடையே, கொரோனா பரவல் குறித்து மாநில நிர்வாகம் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எச்சரித்தபோதும் அதைப் பொருட்படுத்தாமல் முத்தம் கொடுத்து கொரோனாவை விரட்டுவதாக பக்தர்களிடம் அவர் கூறி வந்தார்.



இதையடுத்து கொரோனா அச்சத்தில் இருந்த பலர் அஸ்லம் பாபாவைத் தேடி வந்து முத்தம் பெற்றுச் சென்றனர். அப்படி வந்து சென்ற நபர்களில் யாரோ ஒருவர் அஸ்லம் பாபாவுக்கு கொரோனாவைக் கொடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அஸ்லம் பாபா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில், அஸ்லம் பாபாவிடம் முத்தம் பெற்றுச் சென்ற நபர்கள் குறித்து மத்தியப் பிரதேச மாநில சுகாதார துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் 19 பேர் கண்டறியப்பட்ட நிலையில் பாபாவின் தொடர்பால் 24 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களைத் தனிமைப்படுத்தும் முகாமில் தனிமைப்படுத்தி உள்ளதாகவும் ராட்லா மாவட்டத்தில் மட்டும் 80க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த விசாரணையில் பிடிபடாமல் கொரோனா அச்சுறுத்தலால் அவரிடம் முத்தம் வாங்கிச் சென்ற பலர் கலக்கத்தில் உள்ளனர்.

-ராஜ்
Blogger இயக்குவது.