நேற்று இனங்காணப்பட்ட கொவிட் 19 நோயாளர்களின் விபரம்


நாட்டில் நேற்றைய தினம்(23) மாத்திரம் 40 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 29 பேர் இந்தியாவின் மும்பையில் இருந்து வந்தவர்கள் எனவும் ஏனைய 11 பேரும் அமெரிக்காவில் இருந்து வருகைத் தந்தவர்கள் எனவும் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1991 ஆக அதிகரித்துள்ளது இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 22 பேர் நேற்று பூரணமாக குணமடைந்துள்ளதுடன், இதுவரை 1548 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளனர்.
Blogger இயக்குவது.