தனிமைப்படுத்தலில் மேலும் 24 பேர் வெளியேறினர்
பூஸா கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்து மேலும் 24 பேர் நேற்று(25) வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில், பூஸா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 357 பேர் இதுவரை வெளியேறியுள்ளதாகவும் மேலும் 96 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.