யாழில் பெண்களுடன் சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!!!

யாழில் பெண்களுடன் தவறாக நடக்க முற்பட்டு சேட்டை செய்தார்கள் என நான்கு இளைஞர்கள் மீது அப்பகுதி மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்கள் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்.கலட்டி பகுதியில் மாலை வேளைகளில் ஒன்று கூடும் இளைஞர் கூட்டம் ஒன்று அவ்வீதி வழியாக தனிமையில் செல்லும் பெண்களுடன் சேட்டைகளை புரிந்து வந்துள்ளனர்.
இளைஞர்களின் அந்த செயலை ஊர்மக்கள் நீண்ட நாட்களாக அவதானித்து வந்த நிலையில் , இது தொடர்பில் பொலிஸாரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர்.
எனினும் பொலிஸார் அதனை கண்டுகொள்ளாதநிலையில் , நேற்று மாலை வழமை போன்று அப்பகுதியில் கூடிய இளைஞர் கூட்டம் பெண்களுடன் சேட்டை புரிந்த வேளை , ஊர் மக்கள் ஒன்று கூடி நான்கு இளைஞர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பொதுமக்களின் தாக்குதலிற்கிலக்கான் நான்கு இளைஞர்களும் காயமடைந்து , யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Blogger இயக்குவது.