வெளிநாடொன்றிலிருந்து 88 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
கொரோனா நெருக்கடி காரணமாக நியூசிலாந்தில் சிக்கித்தவித்த 88 இலங்கையர்கள் இன்று பாதுகாப்பாக நாடு திரும்பினர்.
நியூசிலாந்தின் வெலிங்டனில் இருந்து சிங்கப்பூர் வந்த குறித்த பயணிகள் சில்க் எயாரின் விசேட விமானம் மூலம் இன்று மாலை 7.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு அழைத்துவரப்பட்ட பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo