ஆட்குறைப்பு செய்கிறது விமான நிறுவனமான லுஃப்தான்சா!!

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் விமான பயணத்தின் சரிவை சமாளிக்க போராடுவதால் ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக, ஜேர்மனியின் முன்னணி விமான நிறுவனமான லுஃப்தான்சா (Lufthansa) தெரிவித்துள்ளது.

இதற்மைய நிறுவனத்தில் பணிபுரியும் 22,000பேரை பணியிலிருந்து நீக்குவதற்கு லுஃப்தான்சா விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் 50 சதவீதமானோர் ஜேர்மனியில் உள்ளவர்கள் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், நெருக்கடிக்குப் பிறகு சுமார் 100இற்கும் குறைவான விமானங்களே சேவையில் ஈடுபடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லுஃப்தான்சா குழுமத்தில் முடிந்தவரை பல வேலைகளைப் பாதுகாக்க வழி வகுப்பதே இதன் நோக்கம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் 22ஆம் திகதிக்குள் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடப்பட்டு இதற்கான தீர்வு எட்டப்படுமென நம்பப்படுகின்றது.
லுஃப்தான்சா விமான நிறுவனத்தில் உலகளவில் 135,000 இற்க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் பாதி பேர் ஜேர்மனியில் உள்ளவர்கள் ஆவர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.