லசந்த படுகொலைக்கும் எமக்கும் தொடர்பில்லை - மகிந்த!!

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கும் அப்போது எனது தலைமையில் இருந்த அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் 50 வருடகால அரசியல் பயணம் தொடர்பில் சுயாதீன தொலைக்காட்சியில் நடைபெற்ற அனுபவ பகிர்வு நிகழ்ச்சியின்போது, ஊடகவியலாளர்களுக்கு எதிராக செயற்பட்டீர்கள் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிவ்க்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அத்துடன் லசந்த விக்கிரமதுங்க என்னை சந்திப்பதற்கு இரவில் வருவார். அவரின் பாதுகாப்புகருதி ‘புள்ளட்புருப்’ காரிலேயே அவரை நான் திருப்பி அனுப்பி வைப்பேன். ஏனெனில் அவருக்கு எதிராக செயற்படும் குழுவொன்று இருந்ததாகவும் மகிந்த கூறினார்.
மேலும் சில ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதாகவும் இவற்றின் பின்னணியில் செயற்பட்டது யார் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும் என ரணில் விக்கிரமசிங்ககூட நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்ததாகவும் அவர் கூறினார்.
எனவே அரசின் தேவைகளுக்காக இவை இடம்பெறவில்லை என்றும், ஊடகவியலாளர்களை ஒடுக்கவேண்டிய தேவையும் எமக்கு இருக்கவில்லை எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷ இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.