வாடகை அடிப்படையில் வீடுகளை வழங்கத் திட்டம்!!

தொழிலுக்காக தூர இடங்களிலிருந்து வரும் நடுத்தர வகுப்பினருக்கு தங்குமிட வசதிக்காக வாடகை அடிப்படையில் வீடுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே, அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
சதுர அடி ஆகக்கூடிய வகையில் 350 சதுர அடியிலான ‘ஸ்டுடியோ’ வகையிலான வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக, பிரதான பெருந்தெருக்கள் மற்றும் ரயில் பாதைகள் மூலம் சேவைகளை வழங்கும் முக்கிய நகர மத்திய நிலையங்களிலிருந்து 3 கிலோமீற்றர் தொடக்கம் 5 கிலோமீற்றருக்கு உட்பட்ட வகையில் இவ்வாறான வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தேவையான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.