இன்று காலை வவுனியாவில் விபத்து!!

வவுனியா கண்டி வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி மீன்களை ஏற்றிசென்ற வாகனம், வேகக்கட்டுப்பாட்டை இழந்து அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதியதுடன், வீதிக்கரையில் இருந்த உயர் அழுத்த மின்சார தூணுடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த மகேஷ்வர ரட்ணசிங்கம் (வயது 59) என்ற முதியவர் படுகாமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வாகனத்தின் சாரதி காயங்களின்றி உயிர் தப்பியுள்ளார்.

இதேவேளை விபத்தில் உயர் அழுத்த மின்சார தூண் முழுமையாக சேதமடைந்த நிலையில், வாகனத்தின்மீது சரிந்து விழுந்தது.

எனினும் உடனடியாக விரைந்து வந்த மின்சார சபை ஊழியர்கள் மற்றும் பொலிஸாரின் செயற்பாட்டால் பாரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருந்தது.

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.