இன்றைய சூழல் - கவிதை!!

இன்றைய உலகில்
எத்தனையோ கொடுமைகள்...!!!

வேலியே பயிரை
மேய்கிறது....!!!!


காப்பவனே காலனாகிறான்...!!!

சீா்திருத்தச் சிறையும்
சீரழிந்துபோய்விட்டன...!!!

மனிதனைக் காக்கும்
கடவுளான மருத்துவரும்
மனம் கல்லாகிப்போனாா்...!!!

நெற்றிக்கண் திறப்பினும்
குற்றம் குற்றமே எனச்
சொல்ல வேண்டிய நீதியின்
கையும் கட்டுண்டு போனது...!!!

பாமரனுக்கு பதட்டமான
வாழ்க்கையே என்றும் என பட்டயம்
கட்டியாச்சு....!!!!!

சட்டம்,ஒழுங்கும்,நீதியும்,
நோ்மையும் மரணித்துப்போய்
அழுகிப்போன சடலமாகிவிட்டது...!!!

உரிமையைக் கேட்டால்
உயிரைப் பறிக்கும் கொடிய
காலமாகிப்போச்சு...!!!

கொடியவா்களின் கூடாராமாகிப்
போன உலகிலே ...!!!
கொரானாவும்தான் வந்து
கொக்கரிக்குது மக்களைப் பாா்த்து...!!!

என்று மாறுமோ ..???இந்த அவலம்???
என் இனிய மக்களுக்கு
நல்ல காலம் பிறக்குமா...???
இல்லை நாடெல்லாம்
அழிந்துதான் போகுமா...???

நானும்தான் நினைக்கிறேன்
எண்ணற்ற கவலைகளோடு...!!

சாத்தான்குளத்தில்
சாத்தான்களால்
மரணிக்கப்பட்ட
ஜெயராஜ்,பென்னிக்ஸ்
என் ஆழ்ந்த இரங்கல்கள்

கம்பம்.ரத்தினம் குபேந்திரன்

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.