ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கண்டுபிடிப்பு!!

நேற்று மாலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தங்கியிருக்கும் போயஸ் கார்டன் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம தொலைபேசி அழைப்பு மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அவரது வீட்டை வெடிகுண்டு நிபுணர்களும், காவல்துறையினர்களும் முழுமையாக சோதனை செய்தனர்.


ஆனால் சோதனைக்கு பின் ரஜினி வீட்டில் எந்தவிதமான வெடிகுண்டும் இல்லை என்பது உறுதியானதை அடுத்து இந்த மர்ம தொலைபேசி அழைப்பு வதந்தி என்பது உறுதியானது. இதனை அடுத்து ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கடலூரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் என்பது தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அந்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.