சைபர் தாக்குதல் குறித்து கமால் குணரட்ண கூறிய தகவல்!!

அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் தெரிவிக்கையில்,
“இலங்கையில் அண்மையில் அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு வழங்கிய அறிவுறுத்தல்களை பின்பற்றாமை காரணமாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துகொள்வதற்கான அறிவுறுத்தல்கள் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு வழங்கியதாகவும் பாதுகாப்பு செயலாளர் கமல் தெரிவித்தார்.
எனினும் பெரும்பாலான அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் அதனை பின்பற்றியுள்ளன. எனினும், சில அரச நிறுவனங்கள் அதனை பின்பற்றியிருக்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.
இவ்வாறு அறிவுறுத்தல்களை பின்பற்றாமையின் காரணமாகவே குறித்த திணைக்களங்கள் சைபர் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறிய அவர்,
எவ்வாறாயினும், இலங்கையில் இணைய பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு உள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், விமானப்படைபிரிவும் மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கின்ற நிலையில் இவை இரண்டும் இணைந்து இது தொடர்பில் செயலாற்றுவதாகவும் மேலும் கூறியுள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.