தொலைபேசித் திருடர்கள் சிக்கினர்!

யாழ்.நகரில் இரு இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களில் கைதொலைபேசிகளை திருடிய இருவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


யாழ்.காங்கேசன்துறை வீதியில் சத்திரத்துச் சந்திக்கு அருகில் பெண்கள் பயணிக்கும் மோட்டார் சைக்கிளின் திறப்பை எடுக்க மறந்து வர்த்தக நிலையத்திற்கு சென்ற பெண் உடனடியாக திரும்பி வந்தார்.

இதன்போது அவரது மோட்டார் சைக்கிளிள் வைத்திருந்த கைத் தொலைபேசியை களவாடிக்கொண்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றவரை வீதியில் சென்றவர்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

அப்போது திருடனிடம் இருந்த மற்றொரு தொலைபேசிக்கு அழைப்பு வந்துள்ளது.அந்த அழைப்பை எடுத்த பொதுமக்கள் திருடியதற்காக குறித்த நபரை பிடித்துவைத்திருப்பதை கூறியுள்ளனர். இதனையடுத்து அழைப்பை எடுத்தவர் நேரில் வந்துள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபரும் ஒரு திருடன் என தெரியவந்துள்ளது.

அத்துடன் இலங்கை மின்சாரசபைக்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றிலிருந்து தொலைபேசியை திருடிக் கொண்டே அவர் அங்கு வந்தமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இருவரையும் பொதுமக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.