அதிகாரப்பகிர்வை வழங்குவேன் - சஜித் உறுதி!!

ஒருமித்த நாட்டிற்குள் 13 ஆவது அரசியலமைப்பையும் தாண்டி அதிகாரப்பகிர்வை வழங்குவேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.


யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே சஜித் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் “அனைத்து சந்தர்ப்பங்களிலும் 13 அரசியலமைப்பை பாதுகாத்து செயற்படுவேன் என்றும் ஒருருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பகிர்வை மையப்படுத்திய மாகாண சபையும் தன்னால் பாதுகாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதோடு ஒருமித்த நாட்டிற்குள் 13 ஆவது அரசியலமைப்பையும் தாண்டி அதிகாரப்பகிர்வை வழங்குவதுடன் நுண் கடனினால் பாதிக்கப்பட்டுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சிறப்பு திட்டமொன்றை அறிமுகம் செய்து அதனூடாக நிவாரணங்கள் வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அதே போன்று வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளதாகவும், கிராமிய மற்றும் நகர நிர்வாக கட்டமைப்பை உருவாக்கி தனது பிரதேச அபிவிருத்திகளை அந்த மக்களே தீர்மானிக்க கூடிய வகையில் திட்டத்தை உருவாக்குவேன் எனவும் இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.