யாழ்ப்பாணத்தில் தேடப்பட்டு வந்த நபர் கைது!

யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த நபர், கைக்குண்டுடன் நேற்று இரவு, கோப்பாய் பகுதியில் வைத்து, யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் அண்மைய நாட்களாக இடம்பெற்று வருகின்ற திருட்டு சம்பவங்கள் தொடர்பில் “சின்னவன்” எனப்படும் சந்தேக நபர், பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் கோப்பாய்  பகுதியில் வைத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து தாலிக்கொடி,நான்கு சங்கிலிகள், கைக்குண்டு உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.