புத்தளம் - கற்பிட்டி வீதியில் விபத்து!!

புத்தளம் ,பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியின் கல்குடாவ பிரதேசத்தில் இடம்பெற்ற வீதிவிபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் கற்பிட்டி தலவில பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு 7 மணியளவில் பாலாவி பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கள் ஒன்று எதிரே வந்த உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதிக்கொண்டதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபர் இவ்விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் விபத்து சம்பவம் தொடர்பில் உழவு இயந்திர சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொர்பில் கற்பிட்டி போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.