கந்தகாடு தனிமைப்படுத்தல் மையத்தில் மோதல்!!
கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
இன்று (புதன்கிழமை) அதிகாலையில் குறித்த நிலையத்தில் அனுமதிக்கப்பட்டவர்களே இவ்வாறு மோதலில் ஈடுபட்டுள்ளதாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள், கந்தகாடு, சேனபுர ஆகிய மத்திய நிலையங்களில் போதை புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.
இதன்போது காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வெலிக்கந்த பொலிஸார் கூறியுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை