உழவு இயந்திரத்தில் சிக்குண்டு குடும்பஸ்தர் பலி!!

மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தில், மட்டக்களப்பு வெல்லாவெளி 40ம் கிராமம் வம்மியடி ஊற்று கிராமத்தை சேர்த 56 வயதுடைய 4பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளார்.
வெல்லாவெளி பகுதியில், 38ம் கிராமத்துக்கு சிறு போக வேளான்மை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த குறித்த நபர் உழவு இயந்திரத்தில் நெல் ஏற்றும் போது தவறுதலாக சறுக்கி விழுந்துள்ள நிலையில் இயந்திரத்தின் முன் சக்கரத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக வெள்ளாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்க்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.