ராஜங்கணையில் 12,000 பேர் தனிமைப்படுத்தலில்!

அனுராதபுரம், ராஜங்கணைய பகுதியில் கிட்டத்தட்ட 12,000 நபர்கள் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் நாளை பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தின் மூலம் கொரோனா தொற்றுடன் சிலர் அடையாளம் காணப்பட்டதையடத்து, ராஜங்கணைய பகுதியில் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அதனுடன் தொடர்புடைய 5,000 பேரிடம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இதேவேளை கந்தக்காடுகைதிகளை பார்வையிட வந்த எவருக்கும் தொற்று ஏற்படவில்லையென இராணுவத்தளபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


Blogger இயக்குவது.