இலங்கையர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவர அனுமதி மறுப்பு!

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கையர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் நாற்பது இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் நாட்டிலும் கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளுக்கு அமைய வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் சடலங்களை நாட்டுக்குக் கொண்டு வர முடியாத நிலைமை காணப்படுகிறது.
இதன் காரணமாக இறுதிச்சட ங்குகளை அந்த அந்த நாடுகளிலே செய்யுமாறு அறிவிப்பு விடுத்துள்ளோம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.