யாழ். சாவகச்சேரியில் கஞ்சாவுடன் இருவர் கைது!!

யாழ்.சாவகச்சேரி நகரில் கைமாற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட 20 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்துக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பேரிலேயே நேற்றிரவு 7.30 மணியளவில் இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, திருகோணமலையைச் சேர்ந்த ஒருவரும், சாவகச்சேரியைச் சேர்ந்த ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களை இன்று பிற்பகலில் சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.