இரண்டு மணி நேரம் விக்கினேஸ்வரனிடம் விசாரணை!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிடம் உயர் பொலிஸ் சி.ஐ.டி. குழுவொன்று இரண்டு மணி நேரம் கடும் விசாரணை நடத்தியுள்ளது.

கொழும்பிலுள்ள உயர் அதிகாரிகளின் உத்தரவையடுத்தே இந்த விசாரணை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சரின் இல்லத்துக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை திடீரெனச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் தலைமையிலான சி.ஐ.டி. குழுவினரே இந்த விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த டிசெம்பர் மாதம் முதலமைச்சரால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்று தொடர்பாகவே இதன்போது அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உடனடியாகவே இது தொடர்பான ஆவணத்தை கையளித்த விக்னேஸ்வரன், அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பாக தான் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் விக்னேஸ்வரன் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் மேலிடத்துக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்த பொலிஸ் அதிகாரி, தேவை ஏற்பட்டால் தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் வருவதாகவும் தெரிவித்துச் சென்றுள்ளார் என கூறப்படுகிறது.

குறிப்பிட்ட அறிக்கை சிங்கள இணையத்தளம் ஒன்றில் வெளியாகியிருந்ததுடன், இனங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாக அந்த அறிக்கை அமைந்திருந்ததாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.