சிறுவர்களை துஷ்பிரயோகம் - ஆசிரியர் கைது!!

சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை காணொலி எடுத்துவந்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் தனியார் வகுப்புக்களை நடத்தும் ஆசிரியர் எனவும் சுமார் 10 வருடங்களாக அவர் இவ்வாறான துஷ்பிரயோக செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேகநபரிடமிருந்து சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, அவர் எடுத்த காணொலிகள் சிலவற்றையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 3 சிறுவர்கள் நேற்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.