இடைநிறுத்தப்பட்டது துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு!

கொழும்பு துறைமுக ஊழியர்களின் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் முதல் இவர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந் நிலையில் இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உடனான கலந்துரையடலின் பின்னர் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.
3 பளுதூக்கிகளையும் கிழக்கு முனையத்தில் பொருத்தி, பணிகளை ஆரம்பிக்குமாறு ஏற்கனவே கோரப்பட்டுள்ளது. எனினும் அதற்கு தீர்வேதும் வழங்காதமையாலேயே புதன்கிழமை முதல் 3 ஊழியர்கள் பளுதூக்கியின் மீதேறி எதிர்ப்பை வெளியிட்டனர்.
இந்த விடயம் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த அரசாங்க காலத்தில் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 3 பளுதூக்கிகள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
இந்த பளுதூக்கிகளை கிழக்கு முனையத்தில் பொருத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றபோதும் அதற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.
இந்நிலையில், பிரதம் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம் பெற்ற கலந்துரையடலின் பின் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.