பரீட்சைகள் தொடர்பில் விஷேட அறிவிப்பு!

இந்த வருடம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஆகிய பரீட்சைகள் நடைபெறும் திகதி குறித்த முடிவுகளை எதிர்வரும் வாரத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில், பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பரீட்சைகள் இடம்பெறும் திகதி குறித்து தீர்மானிக்கப்படுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுடன் இந்த விடயம் தொடர்பான அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் தினங்களில் பரீட்சை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியினால் கல்வி அமைச்சருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, அடுத்த வாரத்தில் பரீட்சை நடைபெறும் தினம் தொடர்பாக இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.