Disneyland Paris மூன்றரை மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்படுகின்றது!

பிரான்ஸின் முக்கிய கேளிக்கை பூங்காவான Disneyland Paris இன்று(புதன்கிழமை) திறக்கப்படவுள்ளது.

சுமார் மூன்றரை மாதங்களின் பின்னர் Disneyland Paris திறக்கப்படவுள்ளது.
பலத்த முன் ஏற்பாடுகள் கட்டுப்பாடுகளுடன், குறித்த பூங்கா திறக்கப்படுவதாக அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
நாள் ஒன்றுக்கு சராசரியாக 50,0000 பேர் வரை அனுமதிக்கப்படும் இங்கு, தற்போது 25,000 பேருக்கு மாத்திரமே அனுமதி அளிக்கப்பட வழங்கப்படவுள்ளது.
அத்துடன், Disneyland இன் அடையாளமான Mickey மற்றும் Pluto இனை கட்டியணைப்பதற்கும் முத்தமிடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
 11 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சமூக இடைவெளியை கடைப்பிடிக்க உருவாக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்றவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 அதேவேளை, மிக கட்டாயமாக முன்பதிவுகள்/ நுழைவுச் சிட்டைகள் இணையத்தளம் ஊடாக மாத்திரமே வழங்கப்படும். நேரடியான நுழைவுச் சிட்டைகள் விற்பனை செய்யப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.